search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்"

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட ராகுல், சோனியாவை சந்தித்ததால் கமல்ஹாசனுக்கு எந்த பலனும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #KamalHaasan #Congress
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று நடந்த சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை கமல்ஹாசன் சந்தித்து உள்ளாரே?

    பதில்: மக்களால் புறந்தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவருக்கு எந்த பலனும், பயனும் இல்லை.

    கே: தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறதே?

    ப: இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதில் பாரதிய ஜனதா கட்சிக்கும், எனக்கும் எந்த உடன்பாடும் இல்லை. தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் பல்வேறு அணைகள், விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும். ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகிறார்கள். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலை பணிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதியையும் ஒதுக்கியது. ஆனால் இங்குள்ளவர்கள் மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.

    கே: தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்களே?

    ப: பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே நான் கூறினேன். ஆனால் அப்போது அரசும், தமிழக உளவுத்துறையும் அதனை மறுத்தது.

    இப்போது மத்திய உளவுத்துறை மூலம் இங்கு பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    கே: விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை உடைத்து கற்கள் கொண்டுச் செல்லப்படுகிறதே? இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படாதா?

    ப: குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைய வேண்டும். இங்கு துறைமுகம் அமைந்தால் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். துறைமுக திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள். ராஜபக்சேயின் விசுவாசிகள். சீன அரசுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். இங்குள்ள மக்கள் மீதும், அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை இல்லாதவர்கள்.

    விழிஞ்ஞத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு அப்போதே நான் ஆதரவு தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் துறைமுகத்தை எதிர்ப்பதற்கு 100 சதவீத வெளிநாட்டு சதி உள்ளது. குமரி மாவட்ட முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களால், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியுமா? குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலை வழங்க முடியுமா?

    மத்திய மந்திரி என்பதை தாண்டி நான் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் இங்கு முன்னேற்ற திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறேன்.


    கே: 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

    ப: தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதை விடுத்து உருப்படியான செயல்களை அவர் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் குட்டிசுவராக மாறியதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வுமே காரணம்.

    கே: காவிரி பிரச்சனையில் இப்போதும் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கிறதே?

    ப: கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி அமைய காங்கிரசும், அவர்களின் தோழமை கட்சியான தி.மு.க.வும் முயற்சி செய்தது. எனவே மு.க.ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் சிறப்பு விமானத்தில் கர்நாடகம் சென்று குமாரசாமியுடன் பேசி காவிரி தண்ணீரை பெற்று தர வேண்டும். இல்லையேல் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ், நிர்வாகிகள் முத்துராமன், தேவ் ஆகியோர் உடன் இருந்தனர். #PonRadhakrishnan #KamalHaasan #Congress
    எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #SVeShekher
    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் 10-வது வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்கு விடிவு தந்திருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கையெழுத்திட்ட மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகள் தமிழ மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மத்தியில், மாநிலத்தில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது அவர்கள் ஒரு முறை கூட தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் காவிரி விவகாரத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதனை தீர்க்க கூடிய இடத்தில் தி.மு.க. -காங்கிரஸ் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவத்தில் பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. இனி மேலாவது அதனை செய்ய வேண்டும். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அங்கு தேவையானவற்றை செய்வோம்.

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எதை கொண்டு வந்தாலும் சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் தமிழகம் முன்னேற கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒன்றரை கோடி தமிழர்களை கொன்று குவித்து ராஜபக்சேவின் கைக்கூலிகள். அவர்களை ஒன்றரை கோடி தமிழர்களின் ஆவி சும்மா விடாது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தேசத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.

    கடந்த 60 ஆண்டுகளாக தி.மு.க., நாடகம், சினிமாவில் வளர்ந்து வருகிறது. அவர்கள் தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் பல்வேறு கோடி திட்டங்களை செய்துள்ளது. காங்கிரஸ் ஏற்றி வைத்த கடன்கனை அடைத்து வருகிறது.


    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எஸ்.வி. சேகர் பிரச்சனையில் சட்டம் தன் கடமையை செய்யும். கர்நாடகாவில் காலா படம் திரையிட கூடாது என்பது என்ன நியாயம். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னராசு, தேசிய செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #SVeShekher
    காந்தி கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan
    மதுரை:

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    மதுரை கோச்சடையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டு தொடக்கம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவை உலக அளவில் முதல்நிலை நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தூய்மை நிறைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது மட்டுமின்றி, பிரதமர் மோடி தனது கையிலே துடப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.

    தூய்மை இந்தியா திட்டத்தினால் உலக அளவில் இந்தியாவிற்கு பல மடங்கு பெருமை அதிகரித்துள்ளது. இன்று நாடு முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், பாரதிய ஜனதா ஆளும் 21 மாநில முதல்-அமைச்சர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.


    சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டாரோ அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல மடங்கு பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு தூய்மைப்படுத்தப்பட்டுள்ள மதுரை கோச்சடை பகுதி ஒரு ஆண்டாக குப்பைகளை அகற்றாத பகுதியாகும். இதேபோன்று எல்லா இடங்களிலும் தூய்மை பணியை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
    கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதால் தமிழகத்துக்கு இனிமேல் காவிரி தண்ணீர் கிடைக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #KarnatakaElection2018 #cauveryissue
    பூதலூர்:

    பா.ஜனதா சார்பில் டெல்டா மாவட்டங்களில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி நாளை நடக்கிறது. இந்த பேரணி தஞ்சை மாவட்டம் கல்லணையில் நாளை தொடங்குகிறது.

    பா.ஜனதாவின் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி சிறப்பாக அமைய வேண்டி அமாவாசை நாளான இன்று கல்லணையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் பல கருத்துக்களை தெரிவித்து தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன. இதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா சைக்கிள் பேரணி நாளை தொடங்குகிறது.

    காவிரியில் தண்ணீர் பெருக வேண்டியும், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வளம் கொழிக்கவும் வேண்டி கல்லணையில் இன்று சிறப்பு ஹோமம் செய்துள்ளோம்.

    இந்த நேரத்தில் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.

    கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி இனி 5 ஆண்டுகள் இருக்கும். இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் இனி கிடைக்கும். இதனால் தமிழகத்துக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    நடிகர் கமல் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான முடிவை பா.ஜனதா தலைமை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கல்லணையில் நாளை தொடங்கும் உழவன் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்கு மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைக்கிறார். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த பேரணி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி தஞ்சையில் முடிவடைகிறது.

    திருவையாறில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். #BJP #PonRadhakrishnan #KarnatakaElection2018 #cauveryissue
    ×